சூர்யா-ஹரி படம் ட்ராப்? அதிர்ச்சித் தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக ஹரி இயக்கவுள்ள கிராமத்து அதிரடி ஆக்ஷன் கதை படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது

ஆனால் இந்த கதையில் சூர்யா பல்வேறு திருத்தங்கள் கூறியதாகவும், இதனால் வெறுப்படைந்த ஹரி இந்த படத்தை இயக்கும் திட்டத்தை கைவிடும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதனையடுத்து இருவரும் சமாதானம் அடைந்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு தகவல் கூறப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கவுள்ளார்.

Leave a Reply