சூர்யா ரசிகர்களே உண்மையான ‘காப்பான்’: காவல்துறை அதிகாரி பாராட்டு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான நிலையில் அரசியல்வாதிகளும் திரையுலக பிரபலங்களும் தற்போது பேனர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் என்பவர் ’காப்பான்’ திரைப்படத்தின் ரிலீசின் போது சூர்யாவின் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து உதவி செய்யலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சூர்யாவின் ரசிகர்கள் ’காப்பான்’ திரைப்படம் வெளியாகும் தினத்தில் 200 ஹெல்மெட்டுக்கள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைஅடுத்து நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சம்பத், சூர்யாவின் ரசிகர்களே உண்மையான காப்பான்கள்’ என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.