நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தெரிவித்துள்ளது

சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேரும் எழுதிய கடிதத்தை ஏற்று கொண்டனர்.

ஆனால் பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் போது கவனம் தேவை என்றும், நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்றும் நடிகர் சூர்யாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது

சூர்யா, நீட் தேர்வு, சென்னை ஐகோர்ட், தலைமை அமர்வு,

Leave a Reply