சுபஸ்ரீ விஷயத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாததை செய்த கமல்!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பலியான சம்பவத்தை வைத்து பல கட்சிகள் அரசியல் செய்த நிலையில் எந்த அரசியல் கட்சியும் அவரது பெற்றோர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவோ, நிதியுதவி செய்யவோ இதுவரை முன்வரவில்லை.

அதேபோல் இனிமேல் பேனர்கள் வைக்க மாட்டோம் என்ற சூளுரைத்து தங்கள் திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்ட நடிகர்களும் வரவில்லை. நீதிமன்றம் மட்டுமே ரூ.5 லட்சம் சுபஸ்ரீ குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சுபஸ்ரீயின் பெற்றோரை இன்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த சந்திப்பு சுபஸ்ரீ பெற்றோர்களுக்கு நிச்சயம் ஒரு ஆறுதலாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது

Leave a Reply