சுபஸ்ரீ பலியான அதே இடத்தில் மீண்டும் பேனர் விபத்து!

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான பள்ளிக்கரணை சாலை அருகே மீண்டும் ஒரு பேனர் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து சுபஸ்ரீ பலியான இடத்தில் இருந்து சுமார் 100மீ தூரத்தில் நடந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பேனரை ஒரு சிலர் அகற்றி கொண்டிருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து விழுந்ததால் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் என்பவர் படுகாயமடைந்தார். அவரது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இருப்பினும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அடுத்தடுத்து பேனர்களால் விபத்து ஏற்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply