சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: இணை ஆணையர் மகேஸ்வரி எடுத்த அதிரடி நடவடிக்கை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ, அதிமுக பிரமுகர் ஒருவர் பேனர் வைத்ததால் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளான நிலையில் நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்தே தற்போது இதுகுறித்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி அவர்கள் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

இதன்படி சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான சட்டவிரோத பேனரை அகற்றாததற்காக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறைரீதியான நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது 3 பி பிரிவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து நடவடிக்கைக்குள்ளான இன்ஸ்பெக்டர் அழகு அவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்காது என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் பேனரை வைத்த அதிமுகவின் ஜெயகோபால் இன்னும் தலைமறைவாக இருப்பதும் அவர் இன்னும் காவல்துறையினர்களால் கைது செய்யப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply