சீமான் பேசிய முதல் உண்மை: பாஜக பிரமுகர் தகவல்

சீமான் பேசிவருவதை பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. எனவேதான் சீமான் கட்சி ஆரம்பித்து பத்து வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவும் முடியவில்லை, பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கூட பெற முடிவதில்லை

இந்த நிலையில் சமீபத்தில் பேசிய சீமான், ‘காமராஜர் இறந்த போதே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இறந்துவிட்டது என கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சு குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கூறியபோது, ‘சீமானின் முதல் உண்மை’ என தெரிவித்துள்ளார்.

நாராயணனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

Leave a Reply