சீனாவை அடுத்து ஈரானுக்கும் விமான சேவை ரத்து: கொரோனோ எதிரொலி

கொரோனோ வைரஸ் பரவி வருவதன் காரணமாக சீனாவுக்கு இந்தியா உள்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் விமான சேவையை ரத்து செய்துவிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சீனாவை அடுத்து ஈரானிலும் கொரோனோ வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் துணை அதிபர் உள்பட பலருக்கு உண்டான வைரஸ் பரவி இருப்பதாகவும், கொரோனோ வைரஸ் காரணமாக ஈரானில் 8 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து சீனா செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஈரானுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply