சிம்பு, விஜய்சேதுபதி: மணிரத்னம் படத்தில் யார் ஹீரோ?
மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, பகத்பாசில் ஆகிய நான்கு முன்னணி நடிகர்களும், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகளும் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் சிம்பு, விஜய்சேதுபதி இவர்களில் யார் இந்த படத்தின் மெயின் ஹீரோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி விஜய்சேதுபதி இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் மட்டுமே நடிப்பதாகவும், சிம்பு தான் இந்த படத்தின் மெயின் ஹீரோ என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இந்த படத்தின் நாயகி என்றும் ஜோதிகாவுக்கு கெளவர வேடம் போன்றது என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியையும் செய்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்த படதை தயாரிக்கவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.