சித்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழிசை அறிவிப்பு
சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து, தமிழகத்தின் உணவு குறித்தும் தமிழர்கள், தமிழ் பண்பாடு குறித்து பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அதனோடு குறைத்து பேசியதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சித்துவின் இந்த கருத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உணர்வையும், உணவையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறைத்து பேசி தென்னாட்டை இகழ்ந்து தமிழ்நாட்டை அவமதித்த காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து நாளை காலை 10:00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்’ என்று தமிழிசை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 15, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.