குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் சோகம்
கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹனுமன் நகர் என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்
ஆனால் நான்கு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை என தெரிகிறது இதனை அடுத்து அவர் நடந்தே மருத்துவமனை செல்ல முடிவு செய்தார்
ஆனால் சாலையில் அவர் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.