சறுக்கலை சரி செய்வோம்: தமிழிசை சூளுரை
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரிசெய்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சூளுரைத்துள்ளார்.,
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைவாகவே உள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.