shadow

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவிருப்பதாக பட நிறுவனம் வாய்ப்பு அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று காலை அறிவித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட ரசிகர்களை தேர்வு செய்யப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

`சர்கார் இசை வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்ட அரங்கம் ஏதும் இல்லை. எனவே ரசிகர்களில் குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply