சரண்-ஆரவ் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் நடிக்கவுள்ளார் என்பதும், இப்படத்தின் தலைப்பு ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிகை நிகிஷா படேல் இணைந்துள்ளார். இதுகுறித்து நிகிஷா பட்டேல் கூறியதாவது:

“நான் இந்தபடத்தில் ஆரவ் காதலியாக நடித்திருக்கிறேன் மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்.

நிகிஷா படேல் தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

Leave a Reply