சந்திரபாபு நாயுடு திடீர் தர்ணா போராட்டம்: ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமானவரித்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி அவர் இந்த தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார். மேலும் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகளின்படி ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். கட்சி ஆட்சி அமைத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.