shadow

சட்டசபையை கலைக்கின்றார் முதல்வர்: விரைவில் தேர்தல்?

தெலங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதால் விரைவில் அம்மாநிலத்திற்கு தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா சட்டசபையை கலைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் இன்னும் சற்றுநேரத்தில் அம்மாநில ஆளுநரை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அளிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஆட்சி வரும் 2019ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் நோக்கில் முதல்வர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். ஆனாலும் வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தான் தெலுங்கானா மாநில தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply