shadow

சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்ட விவகாரம்- திருத்தப்பட்ட மனு இன்று தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருப்பதால் சசிகலாவை 15 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த மனுவில் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்யவுள்ளதாக சசிகலா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

திருத்தப்பட்ட மனுக்களை இன்று தாக்கல் செய்ய சசிகலா தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு சசிகலா விரைவில் பரோலில் வெளிவருவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply