சக பேட்மிண்டன் வீர்ரை திருமணம் செய்து கொண்ட சாய்னா நேவால்
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வரும் சாய்னா நேவால் தனது நீண்ட நாள் காதலரான பாருபள்ளி காஷ்யப் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் காதலித்து வரும் தகவலை அறிந்த இருவீட்டார் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சாய்னா-காஷ்யப் திருமணம் நேற்று நடைபெற்றது.
தனக்கு திருமணம் நடந்த தகவலை சாய்னா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்தார். அவருக்கு சச்சின் தெண்டுல்கர் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.