க்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் திட்டமா?

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் குறித்து வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிர முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை ஏற்று கோபாலின் வக்கீல் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னரும் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு குற்றம் நடந்தால் அதுகுறித்த ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த ஆதாரத்தை காவல் துறை அல்லது நீதித் துறை வசம் ஒப்படைப்பது தான் நீதி என்றும் அதைவிடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவது குற்றமே என்றும் அதுவும் தேர்தலை மனதில் வைத்து வெளியிட்டது மாபெரும் குற்றம் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply