‘கோலமாவு கோகிலா’ பட பாணியில் மது கடத்தல்:
கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு பிரிவு போலீசார், அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையில்
ஒருவர் போர்த்திக்கொண்டு படுத்திருப்பதை போல் இருப்பதை பார்த்த போலீசார், அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் போர்வையை போலீசார் விலக்கி உள்ளனர்.
உள்ளே வெறும் தலையணைகள் மட்டும் வைக்கப்பட்டு ஒருவர் தூங்குவது போல ஜோடிக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார் அவற்றை அகற்றிப் பார்த்தனர். அப்போது, உள்ளே பெட்டி பெட்டியாக 160 உயர் ரக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கார் டிரைவர் மணிகண்டனை கைது
சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இப்படி ஒரு காட்சி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.