கொரோனா வைரசால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குமா? அச்சுறுத்தும் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வைரசால் தற்போது ஆயிரத்து 110 பேர் பலியாகியுள்ளதாகவும் இன்னும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவதால் இந்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கும் என்றும் கூறப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்போது சீனாவில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது இருப்பினும் இந்த தகவல் குறைவாக அறிவிக்கப்படுவதாகவும், இதைவிட அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

மேலும் சீனாவின் பல மாநிலங்களில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன பல மாடி அடுக்குமாடி கட்டடங்களில் கூட ஒருவர் கூட இல்லாமல் காலி செய்துள்ளதாக தெரிகிறது சீனாவின் பல பகுதிகள் தற்போது சுடுகாடு போல் மயான அமைதியாக இருப்பதால் பெரும் அச்சத்துடன் அந்த பகுதியில் உள்ளவர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply