கொரோனாவை அடுத்து நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனைகளை சந்திக்கும் சீனர்கள்

சீனா முழுவதும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவில் உள்ள முக்கிய பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இருந்தால் இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பலமாக குலுங்கியது

இதனால் இரவு நேரங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்தவர்கள் மற்றும் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு அலறி அடித்துக் கொண்டு கட்டிடம் இருந்து வெளியேறி வெட்டவெளியில் தஞ்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply