மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிஎஸ்கே வீரர் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கடுமையாக திட்டமிட்டு பணி செய்வதால் கொரோனா வைரஸ் ஒருசில மாவட்டங்களில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களால் அம்மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களை கேட்க FEEDBACK CALL தொடங்கியதற்காக எஸ்.பி.க்கு ரெய்னா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply