புதைத்துவிட்டதாக மருத்துவ நிர்வாகம் கூறியதால் பரபரப்பு

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனது கணவரை காணவில்லை என பெண் ஒருவர் புகார் அளிக்க, அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அவரது கணவர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் குடும்பத்தலைவர் தவிர மற்ற அனைவரும் சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆனார்கள். அப்போது தனது கணவரின் நிலை என்ன என்பது குறித்து கேட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவரது உடலை தகனம் செய்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அந்தப் பெண் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் முறையிட்டுள்ளார். தனது கணவர் மரணம் அடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் கணவரின் சடலத்தை ஏன் காண்பிக்க வில்லை என்றும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

அந்த பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணின் கணவர் இறந்தவுடன் அவரது குடும்பத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் முன்னிலையில் தான் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர் இந்த சம்பவத்தால் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply