சென்னையில் பரபரப்பு
சென்னையில் 74 முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மாயமானதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவரின் மகன் துளசிதாஸ் இதுகுறித்து ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்
இதனையடுத்து முதியவரை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர்கள் அந்த முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர் இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.