அமிதாப்பச்சனின் நெகிழ்ச்சியான டுவிட்

அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற செய்தி அறிந்தவுடன் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அடைந்து கோடிக்கணக்கானோர், அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்
திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பாமர மக்களும் அமிதாப்பின் ரசிகர்களும் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் இத்தனை அன்பு வைத்துள்ள ரசிகர்களை பிரார்த்தனைக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களை கையெடுத்து நான் கும்பிட்டு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply