கைது குறித்து சிறையில் இருந்தே டுவிட்டரில் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், தான் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சார்பில் தனது குடும்பத்தினர் டுவீட் செய்திருப்பதாக விளக்கம் அளித்த ப.சிதம்பரம், ‘இந்த வழக்கில் அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லையே என மக்கள் கேட்பதாகவும், எந்த ஒரு அதிகாரியும் தவறும் செய்யவில்லையா? என்றும், அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என விரும்பவும் இல்லை என்றும், கடைசியாக கையெழுதிட்டதால்தான் கைது செய்யப்பட்டேனா? என மக்கள் கேள்வி எழுப்பியதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை எந்த மக்கள் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளனர் என்பதையும் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தால் பலரது குழப்பம் தீர்ந்திருக்கும்

Leave a Reply