கைதான ஒருசில மணி நேரங்களில் ஜாமின்: கிஷோர் கே.சாமிக்கு அவ்வளவு செல்வாக்கா?

பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசியதாக சமூக வலைத்தள பிரபலமான கிஷோர் கே.சாமியை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அதே நீதிமன்ரத்தில் அதிரடியாக முன்ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டார். கிஷோர் கே சாமி. இதில் இருந்தே இவருக்கு ஒரு பெரிய அரசியல் கட்சியின் பின்புலம் இருப்பது உறுதியாகியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று கிஷோர் கே சுவாமியை அவரது வீட்டில் கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். ஆனால் கிஷோர் சாமி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உடனே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால், கிஷோர் கே.சுவாமி சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் அரசியல் செல்வாக்கு காரணமாக கைதே செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply