shadow

கேரள முதல்வரிடம் ரூ.40 லட்சம் கொடுத்த குஷ்பு, சுஹாசினி, லிசி

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலம் முழுவதும் உருக்குலைந்து போனது. இந்த நிலையில், கேரளாவிற்கு நிவாரண நிதியாக கோலிவுட் திரையுலகினர் தாராளமாக அளித்து வரும் நிலையில் நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நடிகைகள் குஷ்பு, சுஹாசினி மற்றும் லிசி ஆகியோர் நேரில் சந்தித்து ரூ.40 லட்சம் தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தனர்.

இந்த நிதி கோலிவுட்டின் 80 குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் இருந்தும் ஒருசில நண்பர்களிடம் இருந்தும் சேகரித்த தொகை என்று கூறிய நடிகை லிசி, கேரள மாநிலத்திற்கு தற்போது ஒவ்வொருவருடைய உதவியும் அவசியம் தேவை என்று கூறினார்.

கேரள வெள்ள நிவாரணத்திற்காக குஷ்பு, சுஹாசினி, லிசி ஆகியோர் ஏற்கனவே தனித்தனியாக லட்சக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு, சுஹாசினி, லிசி, பினராயி விஜயன், கேரள வெள்ளம்

Leave a Reply