மனைவியின் தொல்லையால் ஏற்பட்ட விபரீதம்
மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவர் கூகுள்மேப் மீது புகார் அளித்துள்ளதாகவும் அவர் மனைவி தொடர்ந்து அவரை சந்தேகித்து வருவதால் இந்த புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது
மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது அவரது மொபைல் போனை வாங்கி அவரது மனைவி கூகுள் மேப் டைம்லைன் என்ற பகுதியை ஆய்வு செய்துள்ளார்
அதில் சந்திரசேகரன் செல்லாத இடத்திற்கும் சென்றுள்ளதாக சிலசமயம் காண்பித்ததால் சந்திரசேகர் மீது அவரது மனைவி சந்தேகம் கொண்டுள்ளார். இது பல நாள் தொடர்ந்து நடந்துள்ள நிலையில் ஒருநாள் மனம் வெறுத்த சந்திரசேகரன், கூகுள் மேப் மீது மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்துள்ளார்
தான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்று வந்ததாக யுவர் டைம் லைனில் கூகுள் மேப் காட்டுவதாகவும், எனவே கூகுள் மேப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார் இந்த புகாரால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.