குழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே போதமலை என்ற காட்டுப்பகுதியில் 30 இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை குழாய் மூலம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

வேலூர் மாவட்டம் முதுமலை காட்டில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தி மலையிலிருந்து கீழ் பகுதிக்கு சாராயம் அனுப்பியதை புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை அடித்து விரட்டி . இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply