shadow

குழந்தைகளுக்கு ஷூ வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ஷூ அணியாமல் பள்ளிக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்பவரும் இல்லை எனலாம். உடையைப் போல் ஷூ அணிவதும் அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் ஷூவும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் முதலீடே. ஆக ஷூ உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ வாங்கும் பொழுது கீழ்கண்ட முறையில் கவனம் செலுத்துங்கள்.

முதலில் ஒரு பேப்பரில் வெறும் காலுடன் நின்று உங்கள் பாதங்களை முறையாய் வரைந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கி ஓரம் கட்டிய ஷூக்களை எடுங்கள். இந்த பேப்பரின் மீது வலது, இடது கால் பாதம் வைத்து அளவு சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். பெண்கள் பொதுவில் முன் பக்கம் குறுகிய விதத்திலேயே அணியும் ஸ்டைல் உடையவர்கள். ஆகவே பாதம் முன் பகுதி சற்று அகன்று இருந்தால் இந்த ஷூக்கள் அதிக வலியினைக் கொடுக்கும். எனவே சரியில்லாதவைகளை முதலில் வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.

கடைக்கு மதிய நேரத்தில் செல்லுங்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் கால்களின் சரியான அளவினை நீங்கள் எடுக்க முடியும்.
எந்த மாதிரியான ஸாக்ஸ் அணிவீர்களோ அதனையே அப்போது அணிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் பொழுதும் கால் அளவினை எடுங்கள். ஏனெனில் அளவு மாறும் வாய்ப்புகள் அதிகம். இரண்டு காலுக்கும் அளவு வித்தியாசப்படும் வாய்ப்பும் உண்டு.

ஷூவினை அணிந்து எழுந்து நில்லுங்கள். உங்களது நீண்ட விரலுக்கும் ஷூவுக்கும் இடையே அரை இன்ஞ் இடைவெளி இருக்க வேண்டும். நடந்து பாருங்கள். உங்கள் பாதம் படும் ஷூவின் உள் இடம் கடினமாக இல்லாது மென்மையாக இருக்க வேண்டும்.

மிகவும் இறுக்கமான ஷூக்களை போக போக தளரும் என சொல்லி வாங்காதீர்கள்.

மிகவும் லூசான ஷூக்களை ‘பிள்ளை சீக்கிரம் வளர்ந்து விடுவான்’ என்று சொல்லி வாங்காதீர்கள். அடிக்கடி தடுக்கி விழுந்து விடுவார்கள். ஷூவின் அடி வழுக்காது இருக்க வேண்டும்.

இத்தனை முக்கியமாக இப்படி கூறுவதற்கு மருத்துவ காரணங்கள் உள்ளன. முறையற்ற இறுக்கமான ஷூக்களை அணியும் பொழுது கட்டை விரல் அடியில் எலும்பு டிஷ்யூ பெரிதாகி விடும். இதனால் கட்டை விரல் இரண்டாவது விரலை நோக்கித் திரும்பும். இது வலி, வீக்கம் இரண்டினையும் அளிக்கும்.

* கால் ஆணி உருவாகி வலியும், புண்ணும் ஆகும்.
* இறுக்கமான ஷூவினால் விரல்கள் சற்று சுருண்டு மடித்துக் கொள்ளும். வெகு நேரம் ஷூ போட்டு இருக்கும் பொழுது தசைகள் வலுவிழக்கும்.
* இரண்டாவது விரல் முதல் விரல் மீது வந்து மடியும். இதனால் அறுவை சிகிச்சை வரை கூட செல்லும் பிரச்சினை உருவாகும்.

சர்க்கரை நோயாளிகள் இன்னமும் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
குதிகால் வலி ஏற்படும்.
அதிக உயரம் கூடிய ஷூக்களால் பாதமே பாதிக்கப்படும்.
இவையெல்லாம் அவசியம் தானா?

பொதுவில் 75 சதவீதம், 80 சதவீதம் மக்களுக்கு அவர்களின் நடை, பாத அமைப்பு, கால் அமைப்பு இவற்றில் ஏதோ ஒரு வித சிறு பாதிப்பு இருக்கவே செய்யும். அப்போது மேலும் தவறான காலணிகளை அணியும் பொழுது பிரச்சினைகள் கூடவே செய்யும்.
அதிக சிறிய அளவு ஷூக்களை அணியும் 50 வயதினை கடந்த பெண்களில் அநேகருக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’ எனும் பாதிப்பு ஏற்படுவதாக வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. கால்கள், பாதங்கள் உடலின் எடையினைத் தாங்கி காலம் முழுவதும் நடக்கின்றன. அதனை முறையாய் பாதுகாப்போம்.

* கால்களை தினமும் வெது வெதுப்பான நீரில் சோப்பு கொண்டு கழுவுங்கள்.
* மிருதுவான துண்டினால் ஒத்தி எடுங்கள்.
* கால் களுக்கு ‘மாஸ்ட் ரைசர்’ உபயோகியுங்கள்.
* கால் நகங் களை சீராய் வெட் டுங்கள்.
60 வயதிற்குப் பிறகு சருமம் மெலியும். மூட்டுகள் சற்று கடினப்படும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

Leave a Reply