இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை

சென்னையின் முக்கிய பகுதிகளிலும், நேற்று நள்ளிரவு முதல், இன்று அதிகாலை வரை விடிய விடிய மிதமான மழை பெய்ததால் சென்னையே குளிர்ச்சியாக காணப்படுகிறது

தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வருவதை அடுத்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

அந்த வகையில் வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி பரவியிருந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை கொட்டியது.

நேற்றும் இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் மழை பெய்ததால் சென்னை மக்கள் குளிர்ச்சியை அனுபவித்தனர்.

Leave a Reply