shadow

குற்றாலத்தில் காட்டாறு: தடையை மீறி அருவியில் குளித்த நபர் பரிதாப பலி

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வரும் நிலையில் கேரள மாநிலமே வெள்ளத்தால் முழ்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி அருவிக்கு சென்று குளித்த ஒரு நபரை வெள்ளம் அடித்து சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலியான நபர் சிவகாசியை சேர்ந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply