கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15வது நினைவு தினம்

கடந்த 2004 ஆம் ஆண்டு இதே ஜூலை 16ஆம் தேதி தான் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கொடூரமான தீ விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து 15 ஆண்டுகள் ஆனபின்னரும் இன்னும் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஆறுதல் அடையவில்லை. இதுகுறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஜூலை 16ஆம் தேதி 94 குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply