shadow

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு. நடிகர் ஜெய்யை கைது செய்ய உத்தரவு

சமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு பகுதியில் விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது ஜெய் ஆஜராகவில்லை.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்னும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நடிகர் ஜெய், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதி என்பதும் இதுகுறித்து ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரிந்ததே

Leave a Reply