கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் திடீர் உயர்வு

சென்னை மக்களின் பொழுது போக்கு இடங்களில் ஒன்றான கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.20 என இதுவரை கட்டணம்வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனிமேல் இந்த கட்டணம் சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Leave a Reply