காஷ்மீரில் அடுத்தகட்ட நடவடிக்கை: அமித்ஷா ஆலோசனை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கிய நிலையில் அடுத்தகட்டமாக அம்மாநிலத்தை இரண்டு யூனிகளாக பிரிக்கவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திமுக தனது எதிர்ப்பை நிறுத்தி கொண்டது
இந்த நிலையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காஷ்மீரில் நடைமுறைபடுத்தப்பட்டவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.