கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளம்: 7 பேர் பலி

கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

வட ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டில் நேற்று உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த போட்டி நடைபெற்ற மைதானம் அருகே ஆறு ஒன்று உள்ளது . அந்த ஆறு ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடி வந்த நிலையில் திடீரென வெள்ளநீர் கால்பந்து மைதானத்தில் புகுந்தது

இதனால் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இந்த வெள்ளத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் என்றும் இன்னொருவர் சமீபத்தில் திருமணமான 35 வயது நபர் விசாரணையில் தெரிய வந்துள்ளது

Leave a Reply