காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம், விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கட்டாயம் எதுவும் இல்லை. எனவே காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply