shadow

காரைக்குடி காளை அணி அபாரம்: காஞ்சி அணியை வீழ்த்தியது

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்ட் செய்த காஞ்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது. காஞ்சி வீரர் விஷால் 40 ரன்களும், சஞ்சய் யாதவ் 27 ரன்களும் குவித்தனர். காரைக்குடி காளை அணி தரப்பில் லக்‌ஷ்மன் மற்றும் மோகன் பிரசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பறினர்.

இந்த நிலையில் 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய காரைக்குடி அணி 16.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

அந்த அணியில், ஸ்ரீகாந்த் 49 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், ஸ்ரீநிவாசன் 19 பந்துகளில் 19 ரன்களும் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அஷ்வந்த் மற்றும் சுனில் சாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர். 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அனிருதா ஸ்ரீகாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply