காதல் பிரச்சனையில் இளம்பெண் தற்கொலை: ஐதராபாத் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை
காதல் பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த இளம்பெண்ணின் காதலரும் சாப்ட்வேர் எஞ்சினியருமான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அருணா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலை அருணாவின் பெற்றோர் ஏற்கவில்லை
இந்த நிலையில் காதலர்கள் சந்தித்து கொள்ளக்கூடாது என அருணாவின் பெற்றோர் கண்டித்ததால் அருணா இரு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலறிந்து ராகவன், கோட்டகுப்பம் வந்த அவர நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாகவும், இந்த கொலை குறித்து 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.