shadow

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளபடவேடு தேவனங்குளம் என்ற பகுதியை சேர்ந்த +2 படித்து வரும் தீபிகா என்ற மாணவியை, படவேடு மங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை செய்துள்ளார்.

ஆனால் தீபிகா அவருடைய காதலை ஏற்க மறுத்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தீபிகா பள்ளி சென்றபோது, மறைந்திருந்த பசுபதி திடீரென, தீபிகாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த தீபிகாவை, அந்த பகுதியில் இருந்தவர்கள் தீபிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பசுபதையை கைது செய்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பசுபதி மீது போஸ்கோ சட்டம் பாய்ந்தது. அதன்பின்னர் திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பசுபதி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பட்டப்பகலில் பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply