காணாமல் போன முகிலன் என்ன ஆனார்? உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்
சமூக சேவ்கர் முகிலன் காணாமல் போன வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாகவும், முகிலன் குறித்த தகவலை வெளியே சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் பதில் அளித்தனர்
முகிலன் காணாமல் போன விவகாரம் குறித்து ஹென்றி டிபேன் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில் இன்றைய விசாரணையின்போது சிபிசிஐடி இவ்வாறு பதில் அளித்துள்ளது
இதனையடுத்து ஆட்கொணர்வு வழக்கை 3 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து ஆதாரம் உள்ளது என கூறியவர் முகிலன் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.