காங். எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா திடீர் விருந்து: நாளை பட்ஜெட் நடக்குமா?
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைத்ததில் இருந்தே அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு திடீரென தேநீர் விருந்து வைத்துள்ளார். பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த இந்த விருந்தில் காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நாளை கர்நாடகா சட்டசபையில் பட்ஜெட் தொடர் ஆரம்பிக்கவுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு சித்தராமையா தேநீர் விருந்து வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் குமாரசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒருங்கிணைப்பதற்காகவே சித்தராமையா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மஜதவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் நாளைய பட்ஜெட் தொடர் பிரச்சனையின்றி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.