கவலையின்றி மக்கள் வசிக்கும் இந்திய நகரங்கள் பட்டியல்
பொதுமக்கள் எந்தவித கவலையும் இன்று வசிக்கும் இந்திய நகரங்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்தட் பட்டியலில் சென்னைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்த நகரங்களின் வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்கள் பின்வருவன:
1. புனே
2. நவி மும்பை
3. மும்பை
4. திருப்பதி
5. சண்டிகர்
6. தானே
7. ராய்ப்பூர்
8. இந்தூர்
9. விஜயவாடா
10. போபால்
இந்த பட்டியலில் சென்னைக்குக் 14வது இடமும் டெல்லிக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.