shadow

கவர்னரை சந்திக்க திருமாவளவன் திட்டம்: ஏன் தெரியுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை குறித்து பேச கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாட்டை நடத்த உள்ளதாகவும், இதில் பங்கேற்க காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Reply