shadow

களிமண்ணில் விநாயகர் சிலை: புதிய உலக சாதனை

வரும் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இந்திய மக்கள் தயாராகி வரும் நிலையில் பள்ளிக்குழந்தைகள் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிரியர்களின் உதவியுடன், களி மண்ணில் மாணவர்கள் விநாயகர் சிலைகள் செய்தது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சாதனையை படைக்க உதவிய ஆசிரியர்களுக்கும் உலக சாதனை படத்தை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் இணையதள பயனாளிகள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply