கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த துப்பாக்கி’ படம்
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முதலில் இணைந்த திரைப்படமான ‘துப்பாக்கி’ மிகப்பெரிய வெற்றி பெற்று விஜய்யின் முதல் ரூ.100 கோடி வசூல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்
இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு மீண்டும் அதே துப்பாக்கி டைட்டிலில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். அதாவது அவர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ‘துப்பாக்கி முனை’
விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவில், எல்.வி.முத்துகணேஷ் இசையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் எழுதுகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.