கலெக்டர், சிபிஐ அதிகாரி வேடங்களை அடுத்து பத்திரிகையாளர்: கலக்கும் நயன்தாரா

நடிகை நயன்தாரா அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்திலும், விஸ்வாசம் படத்தில் தொழிலதிபர் வேடத்திலும், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்திலும், நடித்திருந்த நிலையில் தற்போது ‘ஐரா’ படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சர்ஜூன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் சர்ஜூன் மேலும் கூறியபோது , ‘நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களில் ஒன்று தைரியமான பத்திரிகையாளர் கேரக்டர் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னொரு கேரக்டரில் அப்பாவி இளம்பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்முறையாக நயன்தாரா இரண்டு வேடங்களில் அதிலும் இரண்டு வேடங்களும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத வகையில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply